tamilnadu

img

தமிழியக்கம் தொடக்க விழா

திருத்துறைப்பூண்டி, மே 11-தமிழியக்கம் உலகத் தமிழ் அமைப்பின் திருவாரூர் மாவட்ட கிளை அமைப்பு தொடக்க விழா திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழியக்கத்தின் மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் தலைமை வகித்தார். கிழக்கு வாசல் உதயம் பத்திரிகை ஆசிரியர் உத்தமசோழன், கவிஞர் தஞ்சை தரணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டிமன்ற பேச்சாளர் நாகை ஜோதி வரவேற்று பேசினார். தமிழியக்கத்தின் தென்தமிழ் நாடு ஒருங்கிணைப்பாளர் சிதம்பரபாரதி சிறப்புரையாற்றினார். மாவட்ட மைய நூலகர் ஆசைதம்பி, சரவணன், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ராம்பிரகாஷ், முத்துபேட்டை தமிழ் இலக்கிய மன்ற செயலாளர் ராசமோகன், திருத்துறைப்பூண்டி கலை இலக்கிய பெருமன்ற தலைவர் கலை ஆசிரியர் நேரு அரங்ககுப்புசாமி, வணிக்குரல் பத்திரிகை ஆசிரியர் கருணா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவில் பாரதமாதா நாட்டியப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் சங்கீதா மணிமாறன் நன்றி கூறினார்.

;