கரூர், மே 10-11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த சேரன் மெட்ரிக் பள்ளி மாணவர் ஸ்ரீயோகேஸ்வரன் (574-600), பள்ளி அளவில் 2-ம் இடம் பிடித்த மாணவி அனு(560-600) மற்றும் 3-ம் இடம் பிடித்த மாணவி ஹேமாநந்தினி(555-600) ஆகியோரை பள்ளித் தலைவர் கருப்பண்ணன், பள்ளி ஆலோசகர் செல்வதுரை, ஆலோசனைக்குழு உறுப்பினர்களும், பள்ளி நிர்வாகி பெரியசாமி, தாளாளர் பாண்டியன், முதல்வர் பழனியப்பன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று இப்பள்ளி சாதனை புரிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.