திருச்சிற்றம்பலம் கோயிலுக்கு குடமுழுக்கு செய்யக் கோரிக்கை
தஞ்சாவூர், நவ.10- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகு திக்குட்பட்ட, திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் உடனுறை பெரிய நாயகி அம்மன் கோயிலுக்கு குட முழுக்கு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு சந்தித்து இது குறித்து வலியுறுத்தினார். பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் திரு ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடப் பெற்ற திருத்த லமாகும். கிபி 7 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் குடமுழுக்கு செய்யப்பட்டது. இக்கோயில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் குட முழுக்கு செய்யப்பட்டது. 18 வருடங்களாக பராமரிப்பு இன்றி, சிதலமடைந்து வரும் இக்கோயிலை குடமுழுக்கு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள பழமை வாய்ந்த அம்மணிசத்திரம் சிவன் கோயிலுக்கும் குட முழுக்கு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அப்போது கேட்டுக் கொண்டார். கோரிக்கைகளை பரிசீ லித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்.
நகர்ப் பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளால் மக்கள் அவதி
தஞ்சாவூர், நவ.10- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட நகர்ப் பகுதிகளில் சுற்றித் திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட சிதம்பரம் ரோடு, தேவதாஸ் ரோடு, ஆஸ்பத்திரி ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 3 க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இந்த குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து கண்ணில் தென்படும் உணவுப் பொருட்களை தூக்கிச் சென்று விடு கின்றன. விரட்ட வரும் குடும்பத் தலைவிகள், குழந்தை களை நோக்கி அச்சுறுத்தும் வகையில் கடிக்க பாய்கி றது. மேலும் இதில் ஒரு குரங்கை தெருநாய்கள் கடித்து, காயத்துடன் சுற்றித் திரிகிறது. ஒருவேளை ரேபிஸ் நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கும் மேயானால், பொதுமக்கள், சிறு வர்களை கடித்தால் உயிருக்கு ஆபத்தான நிலை உரு வாகும். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம், தீயணைப்பு துறை, வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படு கிறது. அதிகாரிகள் நடவடிக்கையில் சிக்காமல் குரங்குகள் தப்பி ஓடி விடுவதாக கூறப்படுகிறது. எனவே, நன்கு பயிற்சி பெற்ற வனத்துறையினர் வந்தால் மட்டுமே குரங்குகளை பத்திரமாக பிடிக்க முடியும் என்கின்றனர். இதுகுறித்து தோழமை சமூக சேவை மைய நிர்வாகி மருத.உதயகுமார் கூறுகையில், “காயம்பட்ட குரங்கிற்கு சிகிச்சை அளித்து, அவற்றை பத்திரமாக மீட்டு, வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தோழர் எம்.பி.கண்ணுச்சாமி நினைவு தின நிகழ்ச்சி
திருத்துறைப்பூண்டி, நவ.10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருத்துறைபூண்டி, முத்துப்பேட்டை வடக்கு, தெற்கு ஒன்றிய குழு மற்றும் நகர குழுவின் சார்பில் திருத்துறைப் பூண்டி கட்சியின் முதுபெரும் தோழர் எம்.பி.கண்ணுசாமி 28-ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி வேதை சாலை யில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக வேதை சாலை யில் உள்ள அவரது ஸ்தூபியிலிருந்து இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று அவரது நினைவிடத்தில் மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட் டது. அதன் பிறகு அவரது ஸ்தூபியில் செங்கொடி ஏற்றப்பட்டது. கொடி யினை தமிழ் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் ஏற்றி வைத்தார். நிகழ்ச்சிக்கு நகர குழு செயலாளர் கே.ஜி.ரகுராமன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் டி.வி.காரல்மார்க்ஸ், வி.டி.கதிரேசன், கு.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.முருகானந் தம், சி.ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர்கள் டி.சுப்பிரமணியன், எஸ்.சாமிநாதன், கே.வி.ராஜேந்திரன், எம்.பி.கே.பாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர்.வேதையன், பி.என்.தங்கராசு, ஏ.கே.வேலவன், என். வீராச்சாமி, எம்.முருகதாஸ், எஸ்.எஸ்.பாலகுரு, நகர குழு உறுப்பினர்கள் கே. கோபு, ஆர்.எம்.சுப்பிரமணியன், எஸ்.தண்டபாணி, எம்.ஜெயபிரகாஷ், ஏ.கே. செல்வம், எம்.சண்முகம், உலகநாதன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன் புகழஞ்சலி செலுத்தி பேசுகையில், தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது, நவம்பர் புரட்சி தினம் மற்றும் அதே போன்று தமிழ்மொழி பாதுகாப்பு மற்றும் இந்தி திணிப்புக்கு எதிரான நிகழ்ச்சிகள் இந்த நாளில் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திருத்துறைப்பூண்டியில் எம்.பி.கண்ணுசாமி, வேதையன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் இந்த பகுதியில் உள்ள பல தரப்பட்ட மக்களை ஒன்றிணைத்து கட்சியின் பின்னால் அணி திரட்டினர். அவர்களது வழியில் வரக் கூடிய இந்த நாட்களில் வாலிபர்கள், மாதர்கள் அனைவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் தத்துவத்தை ஏந்திக் கொண்டு மக்களை பிளவு படுத்தும் மதவாத சக்திக்கு எதிராக இருப்போம் என்றார்.
மின் நிலையப் பணிகளை விரைவுபடுத்தக் கோரிக்கை
தஞ்சாவூர், நவ.10- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே நாட்டாணிக்கோட்டை கிரா மத்தில் அமைக்கப்பட்டு வரும் துணை மின் நிலையப் பணிகள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கி றார்கள். பூக்கொல்லையில் உள்ள சேதுபாவா சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ரெட்டவயல் செல்லும் சாலை யில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் 33 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்கும் பணி சில ஆண்டுகளுக்கு முன்பு தொட ங்கியது. சுமார் ரூ 10 கோடி திட்ட மதிப்பில் அமைக்கப்படுவதாகக் கூறப்படும் இப்பணி சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இது குறித்து மின்வாரிய அதிகாரி களிடம் கேட்ட போது, ‘மின் வழித்தடம் அமைப்பதில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரி விக்கும் சூழலில், மீண்டும் மாற்று வழித் தடம் அமைப்பது. போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், கட்டுமானப் பொருள்கள், தளவாடப் பொருட்கள் வருவதில் தாம தம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்ததாரர் அலட்சியம் காரணமாக பணியாளர்கள் இன்றி வேலை முடியாமல் தாமதமாவது போன்ற பல்வேறு காரணங்களால் பணி கள் இழுத்துக் கொண்டே செல்கிறது” என்றனர். இதுகுறித்து பேராவூரணி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் குமணன் கூறு கையில்,” பணிகள் தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாகியும், நிறைவடையாமல் உள்ளது. இதனால் திட்ட மதிப்பீடு அதி கரிக்கும் அபாயம் உள்ளது. இப்பகுதி மக்களுக்கு தடையின்றி தேவையான மின் அழுத்தத்துடன் மின் விநியோகம் கிடைக்கும். எனவே, மின்வாரிய உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விரைந்து பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்” என்றார்.