tamilnadu

சீர்காழி மக்கள் தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

செ.ராமலிங்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம்


சீர்காழி. ஏப்.11- நாகை மாவட்டம் மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளராக செ.ராமலிங்கம் போட்டியிடுகிறார். இவரது சகோதரர் சக்கரவர்த்தி, கொள்ளிடம் கிழக்குஒன்றிய திமுக செயலாளர் மலர்விழி திருமாவளவன் தலைமையில் வாக்கு சேகரித்தார். அவருடன் மாவட்ட மகளிரணிதலைவி லதா மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். எங்களது வேட்பாளர் மயிலாடுதுறை தொகுதி லோக்சபா உறுப்பினராக சிறப்பாக செயல்படுவார் என்றுஉறுதியளித்து வாக்கு சேகரித்து வருகிறேன். மக்களிடம் வேட்பாளருக்கு ஆதரவு அதிகரித்து காணப்படுகிறது என சக்கரவர்த்தி தெரிவித்தார்.


திருச்சிற்றம்பலம் தீ விபத்து:  தடயவியல் நிபுணர்கள் சோதனை


தஞ்சாவூர், ஏப்.11-தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ளதுகளத்தூர் கிராமம். இங்குள்ள கவரத் தெருவில் வசிப்பவர்கள் பார்வதி, ரவிச்சந்திரன், முத்துராமலிங்கம், பாக்கியம். ராணி, முத்துமீனா இவர்களுக்கு சொந்தமான 6 கூரைவீடுகள் அடுத்தடுத்து திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. பகல் நேரத்தில் கூரை வீடுகளில் தீப்பற்றி எரிந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து எப்படிஏற்பட்டது என்பது குறித்து அறிய தஞ்சை மண்டல தடய அறிவியல் துறை துணை இயக்குநர் பாலமுருகன் தலைமையில் நிபுணர்கள் தீ விபத்து நடந்த வீடுகளில்ஆய்வு செய்தனர். அப்பொழுது அங்கு கிடைத்த ஒருவகைரசாயன பவுடரை பரிசோதனை செய்வதற்காக எடுத்துச்சென்றனர்.


;