tamilnadu

img

ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்விச் சேவையில் த.பே.மா.லு கல்லூரி

கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் மதமாற்றம் நடக்கிறது அங்கே இந்து மதத்தை சேர்ந்தவர்கள் படிக்காதீர்கள் என அப்பட்டமான பிரச்சாரத்தை மதவெறி அமைப்புக்கள் பரப்பி வரும் நிலையில் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கல்வி சேவையை மதம் பார்க்காமல், சாதி பார்க்காமல் வழங்கி வரும் கல்வி நிலையங்கள் ஏராளமானவை நாடு முழுவதும் உள்ளன. அந்த வரிசையில் தரங்கம்பாடி அருகே உள்ள பொறையாரில் இயங்கி வருகிற தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியும்(த.பே.மா.லு) ஒன்று. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையால் நிர்வகிக்கப்படும் இக்கல்லூரி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, குறைந்த கட்டணத்தை பெற்றுக் கொண்டு கல்வி சேவை தொடர்ந்து வழங்கி வரும் இக்கல்லூரி 1972 ல் தொடங்கப்படிருக்கிறது.கல்லூரி வரலாற்றில் முதல் பெண் முதல்வராக ஜீன்ஜார்ஜ் என்பவர் கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டு தற்போது பணியாற்றி வருகிறார்(10-ஆவது முதல்வர்). கலை, இலக்கியம், பாரம்பரிய கலா ச்சாரம், விளையாட்டு என பன்முக தன்மையுடன் மாணவர்களை பயிற்றுவிப்பதோடு தேசிய அளவில் பலமுறை விளையாட்டுக்களிலும், இலக்கிய பிரிவுகளில் மாநில, மாவட்ட அளவில் சாதனைப் படைத்துள்ளது. பறையாட்டம், சிலம்பாட்டம் என அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை தலைசிறந்த கலைஞர்களைக் கொண்டு பயிற்றுவிக்கின்றனர். தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட சேவை அமைப்புகளில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் தங்களை ஈடுபடுத்தி செயல்படுகின்றனர். 2 ஆயிரத்து நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமின்றி சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், காரைக்கால் போன்ற வெளி மாவட்டங்களிலிருந்தும் வந்து பயின்று வருகின்றனர். காலை, மாலை நேர பிரிவுகளுடன் இயங்கி வருகிற இக்கல்லூரியின் அசாத்திய திறன் வாய்ந்த பேராசிரியர்களைக் கொண்டு பயிற்றுவிக்கப்படுவதால் பல்கலைக்கழக அளவில் சிறந்த தேர்ச்சியும், தங்கப் பதக்கங்களையும் மாணவர்கள் தொடர்ந்து பெற்று வருகின்றனர்.

இயற்கை சூழலுடன் அமைக்க ப்பட்ட இக்கல்லூரி வளாகம், நவீன கட்டமைப்புகளுடன் கூடிய ஆய்வ கங்கள் மற்றும் எஸ்.சி, எஸ்.டி மாணவ ர்களுக்கு அரசு உதவித்தொகை எளிதாய் பெற்றுத் தரப்படுகின்றன. இக்கல்லூரியில் பாரம்பரிய கலைகள் பயிற்றுவிப்பதோடு, அழிந்து வரும் பாரம்பரிய உணவுகளையும் மக்க ளிடம் நினைவூட்டும் விதமாக ஆண்டு தோறும் பிரமாண்டமாக உணவு திருவிழா க்களும் நடத்தப்படுகிறது. 200-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவர்களுக்கு மதிய உணவை இலவசமாய் வழங்குகிறது. பல கிலோ மீட்டர் தொலைவிலிருந்து கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவர்கள் வீடு திரும்ப தாமதமாகும் என்பதை உணர்ந்த பேராசிரியர்கள் தங்களின் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை நிர்வாகத்திடம் அளித்து நாள்தோறும் மதிய உணவை கல்லூரி உணவகத்திலிருந்து இலவசமாய் வழங்கி வருகின்றனர். கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக இந்த சேவையை அளிக்கும் இக்கல்லூரி அதனை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் இயங்குவது பாராட்டுக்குரியது.கல்லூரியில் சேர்ந்து விட்டால் போதும் பல வழிகளில் மாணவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் கல்வி நிலையங்களுக்கு மத்தியில் சத்தமின்றி நல்சேவையாற்றும் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியின் கல்விப்பணி தொடர வாழ்த்துவோம்.  


செ.ஜான்சன், தரங்கம்பாடி.

;