நாகப்பட்டினம், அக்.30- தமிழக அரசின் உத்த ரவுப்படி, மாற்றுத்திறனா ளிகள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் முறையாக நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மற்றும் மாற்றுத் திறனாளி களின் பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்றிட வேண்டும் என்பனவற்றை முன்வைத்தும், நாகப்பட்டி னம் வருவாய்க் கோட்டாட்சி யர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் நாகை மாவட்டக்குழு சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் என். பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் டி.கணேசன் கோ ரிக்கை விளக்கவுரையாற்றி னார். சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் சிறப்புரை யாற்றினார். மாவட்ட நிர்வா கிகள் உட்பட திரளான மாற்றுத்திறனாளிகள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, காத்தி ருப்புப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டம் நடை பெற்றுக் கொண்டிருந்த போது, நாகப்பட்டினம் வரு வாய்க் கோட்டாட்சியர் பழனி குமார் போராட்ட இடத்திற் குத் தாமாகவே முன்வந்து பேச்சுவார்த்தைக்கு வரு மாறு சங்க நிர்வாகிகளை அழைத்தார். அதனடிப்ப டையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஒவ்வொரு மாதமும் 4-வது வியாழக் கிழமை அன்று மாற்றுத்திற னாளி களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் கோட்டாட் சியர் அலுவலகத்தில் நடை பெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். மேலும், இந்தக் குறைதீர் கூட்டங்களில் அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளையும் பங்கேற்க வைக்க நடவடிக்கை மேற் கொள்வதாகவும், மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டத்தன்று, மருத்துவர்க ளை வரவைத்து அடையா ளச் சான்று, ரயில் பயணச் சான்று உள்ளிட்டவைகளை வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் கோட்டாட்சி யர் உறுதியளித்தார்.
இந்தப் பேச்சுவார்த்தை யில் மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நலத்துறைப் பொறுப்பு அலுவலர் சந்திர மோகன் மற்றும் மருத்து வத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகளுக்கும் கோட்டாட்சியர் மற்றும் அதி காரிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் அறிவிக்கப்பட்ட உறுதி மொழிகளை, சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் மற்றும் மாவட்டச் செயலாளர் டி.கணேசன் ஆகியோர் மாற்றுத் திறனாளிகள் கூட்டத்தில் அறிவித்தனர்.