பெரம்பலூர், ஜூலை 8- பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் ப்ளஸ்-1, ப்ளஸ்- 2 பயின்ற மாண வர்களுக்கு அரசால் வழங்கப்படும் லேப்டாப் வழங்கப்பட வில்லை. இது குறித்து தலைமையாசிரியரிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலை யில் இப்பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் அனைவரும் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இதனிடையே 2018-19 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவ, மாணவி களுக்கு வழங்குவதற்காக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட லேப்டாப்கள் வந்தன. இந்த தகவலறிந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜை அணுகி லேப் டாப் வழங்க கோரியுள்ளனர். இதற்கு தலைமை ஆசிரியர் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் ப்ளஸ் 1 பயின்றவர்களுக்கு லேப்டாப் வழங்க அரசு இன்னும் அனுப்பவில்லை என்றார். இதனால் ஆத்திரமடைந்த மாண வர்கள் லேப்டாப் வழங்காததை கண் டித்தும், உடனடியாக அனைத்து மாண வர்களுக்கும் அரசின் இலவச லேப்டாப் பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பெரம்ப லூர் பாலக்கரை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் திங்களன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். தகவலறிந்து வந்த பெரம்ப லூர் காவல்துறையினர், கல்வித்துறை யினர் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறி யல் போராட்டம் கைவிடப்பட்டது. இதே போன்று அரசு பள்ளி மாணவ- மாணவி களும் லேப்டாப் வழங்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்த னர்.