tamilnadu

img

குடிமனைப் பட்டா வழங்கக் கோரி போராட்டம்

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் அய்யர்மலை பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இலவச மனைப் பட்டா, குடிமனை பட்டா வழங்க கோரியும் பல தொற்றுநோய்களை உருவாக்கும் வகையில் தேங்கி நிற்கும் கழிவு நீரை வெளியேற்றவும், 100 நாள் வேலையை தொடர்ந்து 100 நாட்களும் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் பச்சையம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அன்னகாமாட்சி ராஜு மாவட்டக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், முத்து செல்வன், சத்யபிரியா ஒன்றிய செயலாளர் பிரபாகர், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் மூகா.சிவா உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

;