tamilnadu

img

போராட்டம் வாபஸ்: போலீஸ் பாதுகாப்புடன் கடலுக்குச் சென்ற பழையாறு மீனவர்கள்

சீர்காழி, நவ.25- சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் அதிவேக இன்ஜின் பயன்படுத்தும் விசைபடகுகளை தடை செய்ய கோரி பதிவு செய்யப்பட்ட விசை படகு உரிமையாளர்கள் நடத்திய  காலவரை யற்ற வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் மீன்பிடிக்க சென்றனர்.  நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழை யாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்திலிருந்து விசைப்படகுகள், பைபர் படகுகள், நாட்டு படகுகள் மூலம் தினந்தோறும் 5000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இதில் 250 பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகள், 40 பதிவு செய்யப்படாத அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகள், மேலும்,  சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கும் 20 அதிவேக விசைப் படகுகள் ஆகியவை மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. பதிவு செய்யப்படாத அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் பழை யாறு துறைமுகத்தில் நிறுத்துவதற்கோ, கடலுக்கு சென்று மீன் பிடிப்பதற்கோ மீன்வளத்துறையில் அனுமதி இல்லை. எனினும் தடையை மீறி இப்படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் அப்படகு உரி மையாளர்கள் மீன்பிடித்து வந்தனர். இத னால் மீன்பிடித் தொழில் பாதிப்படைவ தாக இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து அதிவேக என்ஜின் கள் பொருத்தப்பட்ட விசைப்படகுகளை தடை செய்யக் கோரி பதிவு செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீன வர்கள் கடந்த ஜூலை 19-ந் தேதி முதல்  காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட் டத்தை துவக்கினர். இதனைத்தொடர்ந்து ஆர்டிஓ, தாசில்தார், மீன்வளத் துறையினர் மற்றும் இருதரப்பு மீனவர்களிடையே நடை பெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.  இதைதொடர்ந்து பதிவு செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்ற உதவியை நாடினர். இதில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி 1983 பிரிவின்படி அரசு அங்கீகாரம் பெறாத விசைப்படகுகள் கடலுக்கு செல்லக் கூடாது என்பதை ஏற்று பதிவு செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் நவ.24-ஆம் தேதி காலை 9 விசைப்படகுகளில் மீன்பிடிக்க புறப்பட்டனர். இவர்களுடன் தடை செய்யப்பட்ட அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட விசைப் படகு ஒன்றும் சென்றது. இதுகுறித்து தகவ லறிந்த நாகை ஏடிஎஸ்பி முருகேஷ் உத்தர வின் பேரில் மயிலாடுதுறை ஆய்வாளர் சிங் காரவேல் மற்றும் காவலர்கள் மற்றொரு படகில் துரத்தி சென்று முகத்துவாரத்துக்கு முன்பாக அதனை மடக்கி துறைமுகத்து க்கு திருப்பி அழைத்து வந்தனர். இருதரப் பும் மோதலில் ஈடுபடாமல் இருக்க ஏடிஎஸ்பி முருகேஷ் தலைமையில் சீர்காழி டிஎஸ்பி வந்தனா, சீர்காழி, மயிலாடுதுறை, மணல் மேடு, திருவெண்காடு, கொள்ளிடம், புதுப் பட்டினம் ஆய்வாளர்கள் மற்றும் 222 காவ லர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.