tamilnadu

img

5 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, பிப்.28- தற்காலிக ஒப்பந்தம் மற்றும் தினக்கூலி அடிப்ப டையில் பணிபுரியும் அனை வரையும் வரன்முறைப் படுத்தி காலிப் பணியிடங்க ளில் காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய  வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வியாழனன்று திருச்சி ஆட்சியர் அலுவலக வளா கத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜீவா னந்தம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில துணைத்தலைவர் பெரியசாமி, மாவட்டச் செய லாளர் பழனிச்சாமி, மருந்தாளுர் சங்க மாநி லச் செயலாளர் சகாதேவன், கல்வி கல்லூரி அலுவலக சங்க கௌடில்யன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், சாலை பணி யாளர் சங்க மாவட்டப் பொரு ளாளர் சண்முகம் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 15 பெண்கள் உள்பட 69 பேர் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.  

;