தஞ்சாவூர், டிச.20- பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா சி.பி.எஸ்.இ வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி விழா நடைபெற்றது. தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகளின் மாநில துணைப் பொதுச் செயலாளர் முனைவர் ஜி.ஆர். ஸ்ரீதர் தலைமை வகித்து, கண் காட்சியை துவங்கி வைத்தார். பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, அறங்காவலர்கள் கணபதி, ராமு, ஆனந்தன், அஸ்வின்ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணிதம், நகரும் பொருட்கள், உணவு, புதிய கண்டுபிடிப்பு முயற்சி கள் உள்ளிட்ட 10 தலைப்புகளில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்களின் அறி வியல் படைப்புகள் காட்சிக்கு வைக் கப்பட்டன. நிகழ்ச்சியில் குமரப்பா பள்ளி முதல்வர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரன், அழகப்பா நீலகண்டன், ஆனந்தன், ஆசிரியர் மூர்த்தி, பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை கார்த்திகா நன்றி கூறினார்.