tamilnadu

பள்ளி மாணவி கொலை: வாலிபர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 7- திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையைச் சேர்ந்த விவசாயியின் 14 வயது 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் திங்களன்று மாலை முள்காடு பகுதியில் சிறுமி உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். இந்த கொலை சம்பவத்தில் உரிய விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்து உடனடியாக தண்டனை வழங்க வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து வரும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வாலிபர் சங்கம் சார்பில் செவ்வாயன்று திருச்சி அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் லெனின் தலைமை வகித்தார்.  மாவட்ட தலைவர் சுரேஷ், மாதர் சங்க தலைவர்கள் சரஸ்வதி, லிங்கராணி, மாணவர் சங்க தலைவர் துளசி, செயலாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.