tamilnadu

img

நீர் நிலை பராமரிப்புக்கு உதவிய பள்ளி மாணவர்கள்

தஞ்சாவூர், ஜூலை 28- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காட்டில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை யொட்டி இளைஞர்கள் தங்கள் முயற்சியில் தூர்வாரும் பெரியகுளத்தில் அப்துல்கலாமின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் ஆட்சியர் ஆ.அண்ணா துரை, திருநெல்வேலி மாவட்ட துணை ஆட்சியர் பி.சிவ குரு பிரபாகரன், யுபிஎஸ்சி- 2019 தேர்வில் வெற்றி பெற்ற தஞ்சையை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சுபாஷினி, கடை மடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(கைபா) டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் கிராம வளர்ச்சி குழு மற்றும் புனல்வாசல் டான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளி தாளா ளர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு நீர் நிலைகளை பாதுகாக்க கோரி அறிவுரை வழங்கப்பட்டது. அப்போது மாணவர்கள் ஒட்டங்காடு பெரியகுளம் ஏரி தூர்வாரு வதற்காக தங்களது சேமிப்பு பணம் ரூ.8406 ஆட்சியர் முன்னிலையில் வழங்கினர். பின்னர் ஒட்டங்காடு பெரிய குளத்தை தங்கள் சொந்த முயற்சியில், இளைஞர்கள், கிராமத்தினர் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளதை பார்வையிட்டு ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.