தரங்கம்பாடி, நவ.11- நாகை மாவட்டம், மயி லாடுதுறையில் அண்மை யில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்ற பொ றையார் சர்மிளா பள்ளி மாண வர்கள் வெற்றிப் பெற்று மாநில அளவிலான போட்டி க்கு தேர்வாகியுள்ளனர். ஏராளமான பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டிகளில் கலந்து கொண்ட பொறை யார் சர்மிளா காடஸ் எஸ்.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யின் தடகள வீரர்களான திலோத்தமி சித்ரா என்ற 9 ம் வகுப்பு மாணவி 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் இரண் டாமிடமும், 9 ம் வகுப்பு அரசன் உயரம் தாண்டுதலில் முதலிடமும், 12 ம் வகுப்பு கலைச்செல்வன் உயரம் தாண்டுதல், 800 மீட்டர் ஓட்டம், ஆகியவற்றில் இரண்டாமிடமும் பெற்றனர். இதனையடுத்து திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும் அதே பள்ளியை சேர்ந்த கலைசெல்வன் 400 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிட மும், அல்அஸ்பர் உயரம் தாண்டுதலில் மூன்றாமிட மும், நிகேஷ், மணிகண்டன், சந்தோஷ், அரசன் ஆகியோர் 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றுள்ள னர். வெற்றி பெற்ற தடகள வீரர்களையும், மாநிலப் போட்டிக்கு செல்லும் முதல் இரண்டு இடங்களை கைப்பற்றியவர்களையும் பள்ளி முதல்வர் பாண்டிய ராஜன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.