சீர்காழி, செப்.16- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே நல்லவிநாயக புரம் கிராமத்தில் சம்பா நேரடி விதைப்பு செய்த வயலை, கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சம்பா நெற்பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ 600 வீதம் அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்நிலையில் சம்பா நேரடி விதைப்பை பார்வையிட்ட வேளாண் உதவி இயக்குநர் நன்கு விதைப்பு செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார் பின்னர் அவர் கூறுகையில், வேளாண் விரிவாக்க மையங்களில் தேவையான நெல் விதை கையிருப்பு உள்ளது. இதனை வாங்கி பயன்படுத்தும் கொள்ளலாம் என்றார். மேலும் சம்பா பயிருக்கான மானியம் பெறுவோர் உடனடியாக வேளாண் அலுவலகத்தை நேரில் அணுகி பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றார். வட்டார வேளாண் அலுவலர் விவேக், வேளாண் உதவி அலுவலர்கள் பாலசந்தர், கார்த்திக் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.