திருச்சிராப்பள்ளி, ஆக.27- திருச்சி மாவட்டம் புள்ளம் பாடி ஒன்றியம் கல்லக்குடி ராஜா தியேட்டர் காமராஜபுரம் பகுதி யில் சாலை விரிவாக்கத்திற்கு இடம் கொடுத்த மக்களுக்கு மாற் றும் இடம் வழங்க வேண்டும். இப்பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு குடி மனை பட்டா வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் புள்ளம் பாடி ஒன்றியக்குழு சார்பில் லால்குடி ஆர்டிஒ அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சிபிஎம் புள்ளம்பாடி ஒன்றியச் செய லாளர் ரஜினிகாந்த் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் நடராஜன், சந்திரன், மல் லிகா, ஒன்றியக்குழு உறுப்பினர் அடைக்கலராஜ் ஆகியோர் பேசினர். பின்னர் நடைபெற்ற அதி காரிகள் பேச்சுவார்த்தையில் 2 மாதத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததால் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.