திருச்சிராப்பள்ளி, ஜூலை 16- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் சேமரசம்பேட்டை பகுதி இனாம் குளத்தூர் கிராமம் வெள்ளிவாடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் வெள்ளிவாடி கிராம மக்கள் அடிப்படை வசதிகளை செய்தி டக்கோரி புதனன்று சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்தி ருந்தனர். இதையொட்டி செவ்வாயன்று காலை ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலு வலகத்தில் வட்டாட்சியர் கனகமாணிக் கம் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால், மணிகண்டம் ஒன்றியச் செயலாளர் சங்கர், ஒன்றி யக்குழு உறுப்பினர் தங்கராஜ், கிளை செயலாளர் கண்ணன், கிராம முக்கி யஸ்தர்கள் ராஜா, கோவிந்தராஜன், கோபால், தியாகராஜன், செழியன், கண்ணன், ராமச்சந்திரன், சௌந்திர ராஜ், இனாம்குளத்தூர் சப்-இன்ஸ் பெக்டர் இளங்கோ, கிராம நிர்வாக அலு வலர் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சி, வெள்ளிவாடி கிராமத்தில் இணைப்பு சாலை அமைத்து கொடுப்பது தொடர் பாக புதன்கிழமை (ஜூலை 17) காலை மணிகண்டம் வட்டார வளர்ச்சி அலு வலர் ஆய்வு செய்து அதன் விவ ரத்தினை மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை அலுவலகத்திற்கு அனுப்பி தர மான சாலை அமைப்பது. சுடுகாட்டு சாலையை மணி கண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்து சாலையை சீரமைப்ப தற்கான நடவடிக்கை மேற்கொள்ளப் படும். வெள்ளவாடி பகுதியில் ஏற் பட்டுள்ள குடிநீர் பிரச்சனையை சரி செய்ய கிராம மக்களுடன் இணைந்து மணிகண்டம் வட்டார வளர்ச்சி அலு வலர் ஆய்வு செய்து சீரமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெள்ளிவாடி பகுதி மக்களுக்கு 100 நாள் வேலை வழங்க 15 நாட்க ளுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். பழுதடைந்த மின்கம்பங்களை ஒருவார காலத்திற்குள் மாற்றித்தருவது. மின் மாற்றிகளை 2 மாதத்திற்குள் அமைப் பது என மின்சாரத்துறை மூலம் பணி மேற்கொள்வது என தீர்மானிக்கப் பட்டது.