திருச்சிராப்பள்ளி, மே 28- விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி மாவட்டம் லால்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வி.தொ.ச ஒன்றிய செயலாளர் பாலு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி வி தொ.ச. மாநில செயலாளர் பழனிசாமி, மாநிலக்குழு உறுப்பினர் சந்திரன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மணிகண்டன், திலக், ஆண்டனி, குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜீயபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வி.ச. மாவட்ட துணைத் தலைவர் பிரகாசமூர்த்தி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தை விளக்கி வி.ச மாநில துணைத்தலைவர். முகமது அலி, மாவட்ட தலைவர் கே.சி. பாண்டியன், சி.பி.எம் ஒன்றிய செயலாளர் வினோத்மணி, காங்கிரஸ் கட்சி கலை இலக்கிய பிரிவு ராஜேந்திரன், பா.ம.க ஒன்றிய செயலாளர் கோல்டு குமார், வி.தொ.ச ஒன்றிய செயலாளர் சீனிவாசன், பொன் வயல் உழவர் மன்றம் வெங்கடேசன் ஆகியோர் பேசினர். நடராஜன், ராசயைன், காந்தி, ஒண்டிமுத்து, சீனிவாசன், கண்ணதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சமயபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிபிஎம் பொருளாளர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் சிறப்புரை ஆற்றினார்.
பாலகிருஷ்ணன், தேவன் கலந்து கொண்டனர். தா.பேட்டை கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயளாளர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன், கிளை செயலாளர் ரவி, ஒன்றியகுழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, மரகதம், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பாண்டியன் ஆகியோர் பேசினர். நிறைவாக கிளை செயலாளர் ரெங்கராஜ் நன்றி கூறினார். திருவெள்ளறை கடைவீதியில் த.வி.ச. சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு சங்க மாவட்ட துணைத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். சுப்பிரமணியன், வி.தொ.ச உறுப்பினர்கள் மனோகரன், பன்னீர்செல்வம், ரெங்நாதன், செல்லபெருமாள், ராமகிருஸ்னன், சேகர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றியம் வரகூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் கே.மதியழகன் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ராம், எம்.பழனி அய்யா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.பிரதீப் ராஜ்குமார், டி.ராமலிங்கம் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.