tamilnadu

நாளை வருவாய்த்துறை முகாம்

திருச்சிராப்பள்ளி, ஜன.29- திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாகளிலும் வரு வாய்த்துறை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதில் திருச்சி கிழக்கு ஆலத்தூர், திருச்சி மேற்கு உய்யக் கொண்டான் திருமலை, திருவெறும்பூர் நவல்பட்டு, ஸ்ரீரங்கம் அரியாவூர், மணப்பாறை மாதம்பட்டி, மருங்காபுரி கிராமம், லால்குடி பெருவளப்பூர், மண்ணச்சநல்லூர் ஆய்குடி, முசிறி தண்டலைப்புத்தூர், துறையூர் நாகலாபுரம், தொட்டியம் அரசலூர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. எனவே முகாமில்  பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சிவராசு கேட்டுக் கொண்டுள்ளார்.

;