tamilnadu

img

ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறுக!

6 ஆயிரம் பேர் கடிதம் வழங்கல்

தஞ்சாவூர், நவ.15- ஆயுள் காப்பீட்டு பிரீமியங்க ளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படு வதை திரும்ப பெற வேண்டும் என தஞ்சாவூர் கோட்டத்தில் 6 ஆயிரம் பேர் கடிதம் வழங்கியுள்ளதை மாநில ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பி னருக்கு அனுப்பி வைக்கப்படுவ தாக காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர். தஞ்சாவூரில் வெள்ளியன்று சங் கத்தின் தலைவர் சே.செல்வராஜ், பொதுச் செயலாளர் வ.சேதுராமன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “இன்சூரன்ஸ் ஏழை, எளிய மக்களுக்கும் கிடைக்கப் பெற வேண்டும், பரவலாக்கப்பட வேண்டும் என்கிற அடிப்படை நோக் கத்தோடு எல்ஐசி நிறுவனம் உரு வாக்கப்பட்டது. 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் தற்போது 42 கோடி பாலிசிதாரர்கள் உள்ளனர். 1999-ம் ஆண்டு இந்த துறையை மத்திய அரசு தனியாருக்கு திறந்து விடப்பட்டது. அப்போது எல்ஐசி திரட்டுகிற நிதியைவிட அதிகமாக தனியார் நிறுவனங்களால் திரட்ட முடியும் எனவும் காப்பீட்டை பரவ லாக்க முடியும் எனவும் தனியார் மய ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அவற்றையெல்லாம் முறியடித்து இன்றைக்கும் இந்த துறையில் முன்னணி நிறுவனமாக எல்ஐசி திகழ்கிறது.

இந்நிலையில் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்கள் மீது 18 சதவீதம் அள வுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதால் பாலிசிதாரர்கள் இதனை ஒரு சுமை யாக கருதுகின்றனர்.  இது அவர்களது சேமிக்கும் ஆர்வத்தை சீர்குலைத்து வருகிறது. பிரீமியம் மீது மட்டுமல்லா மல், இதர பாலிசி தொடர்பான சேவை களுக்கும் கூட, குறிப்பாக பாலிசி நகல் பெறுவது, வாரிசு உரிமையை மாற்றுவது, தாமதக்கட்டணம் ஆகியவற்றுக்கும் கூட ஜிஎஸ்டி வரி விதிப்பதால் வாடிக்கையா ளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளா கின்றனர். எனவே எல்ஐசி பிரீமியத்து க்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை முழு மையாக ரத்து செய்ய வேண்டும் என இந்திய அளவில் வலியுறுத்தப் பட்டு வருகிறது. அதே போல் தமிழ கம் முழுவதும் இந்த கோரிக்கை யை பல்வேறு அரசியல் கட்சியின ரும் முன்வைத்துள்ளனர். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க மும் ஜிஎஸ்டி வரிவிதிப்பை ரத்து செய்ய வேண்டும் என கையெ ழுத்து இயக்கத்தினை நடத்தி யுள்ளது. அதன்படி தஞ்சாவூர் கோட்டத்தில் 9 மாவட்டங்களில் 4 எம்பிக்கள், 12 எம்எல்ஏக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், வணிகர்கள், தொழிற்சங்கத்தினர், மருத்துவர்கள், பேராசிரியர்கள் என 6 ஆயிரம் பேர் கடிதம் எழுதி உள்ளனர். இந்த கடிதத்தினை தமிழகத்தின் ஜிஎஸ்டி கவுன்சில் குழு உறுப்பி னரும், அமைச்சருமான டி.ஜெயக் குமாருக்கு வெள்ளிக்கிழமை தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், முதல்அமைச்சர், எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பி னரிடம் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் காப்பீட்டு பிரீமியத்துக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பது தொடர்பான விவா தம் நடைபெறும் என எதிர்பார்க் கப்படுகிறது” என்றனர். அப்போது சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆர்.புண்ணியமூர்த்தி, பொருளாளர் எம்.ரவிசங்கர், இணை பொருளாளர் ஆர்.வெங்கடசாமி, லிகாய் முகவர் சங்க மாநிலச் செயலாளர் என்.ராஜா, கோட்டத் தலைவர் தங்க மணி ஆகியோர் உடனிருந்தனர்.