கும்பகோணம், ஜூலை 2- தேர்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களுக்கு வாடகை பாக்கியை உடனே வழங்க கோரி தஞ்சை மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க தஞ்சை மாவட்ட பேரவை கூட்டம் கும்பகோணத்தில் சங்க நகர செய லாளர் ரவி தலைமையில் நடைபெற்றது. பேரவைக்கு நகர பொருளாளர் குருமூர்த்தி முன்னிலை வகித்தார் சங்க மாநில துணை செயலாளர் பார்த்தசாரதி வீரமுத்து மாநில பொருளாளர் குப்புசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். பேரவையில், அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்திய தனியார் வாகனங்களுக்கு அரசு இதுவரை வாடகை தராமல் உள்ளது இதனால் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆகவே உடனடியாக தேர்தலுக்காக பயன்படுத்திய வாக னங்களுக்கு உரிய வாடகையை உடனே தர வேண்டும். மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சாலை பாது காப்பு மசோதாவை திரும்பப் பெற வேண்டும். இதனை எதிர்த்து ஜூலை 9-ல் நடைபெறும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை தஞ்சை மாவட்டம் முழுவதும் நடத்து வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.