திருச்சிராப்பள்ளி, ஆக.17- மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சிஐடியு சங்க கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் ராமர் தலைமை வகித்தார். சிஐடியு புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ், சங்க மாவட்ட செயலாளர் சேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சங்க நிர்வாகிகள் ராஜா, மதி, மணிகண்டன், ராஜ்மோகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக சங்க நிர்வாகி மோகன் வரவேற்றார். ரவி நன்றி கூறினார். கூட்டத்தில், கடந்த பிப்ரவரி மாதம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டையம்பேட்டை, அப்பாதுறை, லால்குடி அரியூர் உள்ளிட்ட 3 இடங்களில் மணல் மாவட்டு வண்டி ரீச் திறக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.