கும்பகோணம்: மருந்தியல் படித்த மருந்தாளுநர் மட்டுமே மக்கள் நலன் கருதி மருந்தை கையாள வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் கோரிக்கை அட்டை அணியும் இயக்கம் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது. இயக்கத்திற்கு மாநில பொருளாளர் அ.விஸ்வேஸ்வரன் தலைமை வகித்தார். மருந்தாளுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சங்க நிர்வாகிகள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.