tamilnadu

img

துலுக்கவிடுதி கிராமத்திற்கு குடிநீர் வசதி செய்து தரக் கோரிக்கை

தஞ்சாவூர், மே 9-தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் பெரியநாயகிபுரம் ஊராட்சி துலுக்கவிடுதி கிராமத்தில் மின்விசை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் என். ராமநாதன், பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், “பேராவூரணி ஒன்றியம், பெரியநாயகிபுரம் ஊராட்சி, துலுக்கவிடுதி வடக்கு குக்கிராமத்தில் பொன்னம்பல சுவாமி கோவில் அருகில் உள்ள மினி ஓஹெச்டி மோட்டார் கடந்த ஒரு வருட காலமாக இயங்கவில்லை. இதனால் குடிநீருக்காக பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தரப்படவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுத்து நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

;