தரங்கம்பாடி: நாகப்பட்டினத்தில் சனியன்று நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் சென்னையிலிருந்து (நாகை- சென்னை தேசிய நெடுஞ்சாலை) ஆக்கூர் முக்கூட்டு, திருக்கடையூர், அனந்தமங்கலம், தரங்கம்பாடி வழியாக காரில் வரவுள்ள தையொட்டி இப்பகுதியில் உள்ள வேகத்தடைகள், வாகனங்களின் அதிவேகத்தை கட்டுபடுத்து வதற்காக அமைக்கப்பட்ட தொடர் வேகத்தடைகள் என அனைத்துமே முற்றிலும் உடைத்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.அன்றாடம் 108 உள்ளிட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்பவர்களும், பல்வேறு வாகனங்களில் செல்லும் இதய நோயா ளிகளும், கர்ப்பிணி பெண்களும் பல வேகத்தடைகளையும் கடந்து சிரமப்பட்டு தானே சென்று வருகின்றனர். ஆளுநர் இவ்வழியாக செல்வதற்காக ரோட்டை இப்படி உடைக்கிறார்களே என பொதுமக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.