மன்னார்குடி, நவ.8- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக ஆண்டுதோறும் நடத்தப்படும் துளிர் வினாடி வினா போட்டி கோட்டூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தலைமை ஆசிரியை கி.கலாவல்லி தலைமை வகித்தார். கோட்டூர் வட்டாரத்திலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் வினாடி- வினா போட்டிகளில் பங்கேற்றனர். அறிவியல் இயக்க ஆர்வலர் மற்றும் தேசிய மேல்நிலைப்பள்ளி ஆசிரியருமான எஸ்.அன்பரசு, அறிவியல் ஆசிரியர் ஜெ விஜயகாந்த் ஆகியோர் போட்டிகளை நடத்தினர். வட்டார வள மைய மேற்பார்வை யாளர் நா சுப்பிரமணியன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழையும் பரிசினையும் வழங்கினார்.