tamilnadu

கும்பகோணம் ,தஞ்சாவூர் ,சீர்காழி மற்றும் புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

அஞ்சல் காப்பீட்டு  பலன்கள் வழங்கல்

கும்பகோணம், ஜூலை 2-  கும்பகோணம் தலைமை தபால் நிலைய அலுவல கத்தில் டிஜிட்டல் இந்தியா திட்ட ஆண்டு விழா நடை பெற்றது. விழாவிற்கு கும்பகோணம் கோட்ட தபால் துறை கண்காணிப்பாளர் அஜாத் சத்ரு தலைமை தாங்கினார் விழாவில் 4 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான முதிர்ச்சி யடைந்த அஞ்சல் காப்பீட்டு திட்ட பலன்களை வாடிக்கை யாளர்களுக்கு வழங்கி பேசினார்.  கும்பகோணம் கோட்டத்தில் தொடங்கப்பட்ட இந்தி யன் போஸ்ட் வங்கி மூலமாக திருவிடைமருதூர், குட வாசல், வலங்கைமான், பாபநாசம் ஆகிய 5 தாலுகாக்களை சேர்ந்த 10 ஆயிரத்து 745 வாடிக்கையாளர்கள் சிறு சேமிப்பு கணக்கு தொடங்கி பயன்பட்டு வருகின்றனர் விழாவில் துணை கண்காணிப்பாளர் அருள்தாஸ் மேலாளர் வெங்க டேஸ்வரன் மற்றும் அஞ்சலக காப்பீட்டு முகவர்கள் தபால் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அரசு சிறப்பு பள்ளியில் மாணவர் சேர்க்கை

தஞ்சாவூர், ஜூலை 2- தஞ்சாவூர், பார்வைத் திறன் குறையுடையோருக்கான சிறப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் 2019-20ம் கல்வி யாண்டிற்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சேர்க்கை நடைபெறுகிறது. இப்பள்ளியில் அரசால் வழங்கப்படும் கல்வி உபகரணங்கள், சீருடை, காலணி, ப்ரெய்லி புத்த கங்கள் மற்றும் கணித உபகரணங்கள் போன்றவை இலவச மாகப் பெற்றுத் தரப்படுகிறது. நடைபயிற்சி, விளை யாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டி, நடனம், கராத்தே, யோகா, இசை போன்ற கலைகள் கற்பிக்கப்படுகின்றன. மேலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் மருத்துவப் பரி சோதனை செய்யப்படுகிறது. எனவே இப்பள்ளியில் மாணவ, மாணவிகளை சேர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நகை கொள்ளை

சீர்காழி, ஜூலை 2- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடவாசல் கிராமம் மெயின் ரோட்டைச் சேர்ந்த ரெங்கநாதன் மகன் மாரியப்பன்(40). இவர் சம்பவத்தன்று குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் மற்றும் 3 பவுன் நகையை கொள்ளையிட்டு சென்றனராம். இது குறித்த புகாரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓய்வூதியர்களுக்கு நேர்காணல்

புதுக்கோட்டை, ஜூலை 2- புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவூலத்தின் வழி யாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர நேர்காணல் தாங்கள் ஓய்வூதி யம் பெறும் கருவூலத்தில் வரும் ஏப்ரல் முதல் நடைபெறு கிறது. இதுவரை நேர்காணலில் கலந்து கொள்ளாத ஓய்வூ தியர்கள் தங்களது ஓய்வூதிய புத்தகம், ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்காதவர்கள் தற்போது அலுவலக வேலை நாட்க ளில் 15-ம் தேதிக்குள் இந்த ஆவணங்களுடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தப்பட்டுள்ளது.