ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த அழியாநிலை இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 265 குடும்பங்களுக்கு அறந்தாங்கி ரோட்டரி கிளப் தலைவர் ஆடிட்டர் தங்கதுரை தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் அரிசி, மளிகை பொருட்கள் வழங்கினர். ரோட்டரி கிளப் தாமஸ், சரவணன், புவனாசெந்தில், ஆத்மா மதிவாணன், ஜடியல் சேக்சுல்தான், விஜயசுந்தர், வேல்சாமி, செல்வம், தீபக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.