திருவாரூர், பிப்.3- திருவாரூர் திருவி.க அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த 3 மாணவர்களை சமூக விரோதிகள் கடந்த 1-ஆம் தேதி மாலை தாக்கினர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாணவர்களை தாக்கிய சமூக விரோதிகள் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருந்த காவல்துறையைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி கிளை நிர்வாகி மணி தலைமையில் மாவட்டச் செயலாளர் இரா.ஹரிசுர்ஜித், நிர்வாகிகள் அஜீத், அபிமன்யு உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் விளைவாக மாணவர்களை தாக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.