tamilnadu

img

தொழிலாளர் விரோத சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, செப்,6- மத்திய அரசின் மக்கள் விரோத பொருளாதார  கொள்கைகளையும், தொழிலாளர்கள் விரோத சட்டத்தை யும் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வியாழனன்று திருச்சி நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு புறநகர் மாவட்ட பொருளாளர் சம்பத் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தவிச மாநில துணை தலைவர் கே.முகமதலி, அஇவிதொச மாவட்ட செயலாளர் அ.பழநிசாமி, சிஐடியு மாவட்ட செயலாளர் கே.சிவராஜ், தவிச மாவட்ட செயலாளர் வி.சிதம்பரம், மாவட்ட தலைவர் பி.ராம நாதன், விதொச மத்திய குழு உறுப்பி னர் எஸ்.சந்திரன், மாவட்ட தலைவர் ஜே.சுப்பிரமணியண் ஆகியோர் பேசினர். 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். விதொச மாவட்ட துணை செயலாளர் ஏ.கனகராஜ் நன்றி கூறினார்.