திருச்சிராப்பள்ளி, அக்.31- திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாமில் தனியார் துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணி வாய்ப்புகளை வழங்கவுள்ளன. இவ் வேலை வாய்ப்பு முகாமில் 10 மற்றும் 12 ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களும் (வயது வரம்பு: 18-க்கு மேல் 35-க்குள்) கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்று, புகைப்படத்துடன் அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியில் நேரில் ஆஜராகி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.