tamilnadu

img

சிபிஎம் சார்பில் அரசியல் பயிற்சி முகாம்

பெரம்பலூர், ஜூன் 16- இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) கட்சியின் பெரம்பலூர் மாவட்ட அரசியல் பயிற்சி முகாம் துறைமங்கலத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. முதல் அமர்வு பயிற்சி முகாமிற்கு மாவட்ட செயற்குழு பி.ரமேஷ் தலைமை வகித்தார். மார்க்சியத்தின் தோற்றமும் மார்க்சியத்தின் சாதனைகளும் குறித்து மூத்த எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் விளக்கவுரையாற்றினார்.  2-வது அமர்விற்கு வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம் தலைமை வகித்தார். தேர்தல் மத்தியக்குழு முடிவுகள் குறித்து மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் விளக்கவுரையாற்றினார். மாவட்டக்குழு முடிவுகள் பற்றி மாவட்ட செயற்குழு எ.கலையரசி தெரிவித்தார். மக்களுக்கான மருத்துவர் கழக மாநில செயலாளர் டாக்டர் சி.கருணாகரன், டாக்டர் நேரு மற்றும் ஆசிரியர் மணிமாறன், வட்டக்குழு உறுப்பினர்கள் எ.கணேசன், பி.முத்துசாமி, பி.கிருஷ்ணசாமி, சி.சண்முகம், வஸந்தா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;