tamilnadu

நாகை கொள்ளிடம் பகுதியில் அதலபாதாளத்திற்கு சென்ற நிலத்தடி நீர் தடுப்பணைக் கட்ட மக்கள் கோரிக்கை

சீர்காழி, ஜூன் 26- கொள்ளிடம் பகுதியில் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்குச் சென் றுள்ளதால் மக்கள் அதிர்ச்சிய டைந்துள்ளனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதி கடைமடைப் பகுதியாகும். கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களிலும் ஆற்றின் கரைக்கு அப்பால் உள்ள கிராமங்களிலும் கடந்த வருடங்களில் நிலத்தடி அடி நீர் மிகவும் கீழே சென்றது. சில இடங்களில் செம்மண் கலந்த காவி நீரும், சில இடங்களில் உவர் நீரும் இன்னும் சில பகுதிகளில் நல்ல தண்ணீரும் உள்ளது. ஆனால் நிலத்தடி நீரை பூமிக் குள் துளையிட்டு கடந்த வருடங்க ளில் எளிதில் கொண்டு வரும் நிலை இருந்தது. 20 முதல் 40 அடி ஆழத் திற்குள் நிலத்தடி நீர் இருந்தது. இதனை சிரமம் இன்றி அதிக செலவு மின்றி எடுத்து பயன்படுத்தி வந்த னர். சென்ற வருடம் நிலத்தடி நீர் ஆழமானப் பகுதிக்கு சென்றது. ஆனால் கொள்ளிடம் ஆற்றில் மேட் டூர் அணையிலிருந்து அதிகளவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தொடர்ந்து 20 நாட்களுக்குச் சென்று கொண்டேயிருந்தது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர ஆரம் பித்து 40 அடி ஆழத்திலேயே நீர் கிடைத்தது.

ஆனால் இந்த வருடம் தொட ர்ந்து மழைப் பொழிவு இல்லாத தால் நிலத்தடி நீர் அதல பாதா ளத்திற்குச் சென்று கொண்டிருக்கி றது. சென்ற வருடம் 40 அடி ஆழத் தில் கிடைத்த தண்ணீர் இந்த வரு டம் 50 அடியும் அதற்கு மேல் ஆழத்திற்கும் சென்று விட்டது. இத னால் சென்ற வருடம் கொள்ளிடம் பகுதியில் உள்ள பல கிராமங்களில் தண்ணீரை எடுத்து பயன்படுத்திய நூற்றுக்கணக்கான இரும்பு கைபம்புகளில் கடந்த 8 மாத கால மாக தண்ணீர் வரவில்லை. இந்த கைபம்புகளை பிடுங்கி விட்டு மீண்டும் 50 அடிக்கும் மேல் ஆழ் துளை அமைத்து நீரை எடுத்து பயன்படுத்தும் முயற்சியில் விவ சாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால் கடந்த வருடத்தை விட அதிக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல் கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பெரும்பாலான துவக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள கைபம்புகளில் தண்ணீர் வரு வது நின்று விட்டதால் மேலும் 50 அடிக்கும் மேல் ஆழத்திற்கு பூமி யில் துளையிட்டு நிலத்தடி நீரை மேலே எடுத்து வரும் முயற்சியில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் பழனிவேல் கூறுகையில், கொள்ளி டம் பகுதியை பொறுத்தவரை கொள்ளிடம் ஆற்றின் கரையோ ரத்தை ஒட்டியே பல கிராமங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியின் குடி நீர் பஞ்சத்தை தீர்க்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் ஆற்றுக்குள் உப்பு நீர் புகாதவாறு தடுக்கவும், மழைக் காலங்களில் தண்ணீரை சேமிக்கவும் முடியும், வீணாக சென்று கடலில் கலக்கும் தண்ணீர் ஆற்றில் எப்போதும் தேங்கியே இருந்தால் நிலத்தடி நீர் உயரும்,  மேலும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதைத் தடுக்கவும் முடி யும். தேங்கியுள்ள நீரை விவசா யத்திற்கும் பயன்படுத்திக் கொள்ள லாம். எனவே ஆற்றின் குறுக்கே உரிய இடங்களில் தடுப்பணைக் கட்டுவது மூலம் தான் கொள்ளிடம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்கவும் மற்ற பகு திகளில் ஏற்படும் தண்ணீர் பஞ் சத்தை நீக்கவும் முடியும்.  ஆற்றில் தண்ணீர் எப்போதும் தேங்கும் வகையில் தடுப்பணை கட்டினால் ஆற்று தண்ணீரை எடுத்து தொடர்ந்து விவசாயத்திற்கு எந்த சிரமுமின்றி எளிதில் பயன படுத்தலாம். இதன் மூலம் ஆற்றின் கரையோரமுள்ள பல ஆயிரக்க ணக்கான ஏக்கர் விளை நிலங்கள் தரிசாக மாறுவதை தடுக்க முடியும் என்றார்.