tamilnadu

img

மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தடுப்பு முறைகள்

சீர்காழி, ஜூலை 9- கொள்ளிடம் அருகே கோபாலசமுத்திரம் ஊராட்சி யில் உள்ள சாமியம் கிராமத்தில் ஒருவருக்குச் சொந்தமான வயலில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிரில் அமெ ரிக்கன் படைப்புழுக்களின் தாக்குதல் ஏற்பட்டது. தகவலறிந்த கொள்ளிடம் வேளாண் உதவி இயக்கு னர் சுப்பையன், வேளாண் அலுவலர் விவேக், வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் ராஜா ரமேஷ் உள்ளிட்ட அதி காரிகள் குழுவினர் பூச்சி தாக்குதலுக்குள்ளான மக்காச் சோளப் பயிரை நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது மக்காச்சோளப் பயிரில் அமெரிக்கன் படைப் புழு தாக்கியிருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து அங்குள்ள விவசாயிகளிடம் படைப்புழுக்களை தடுக்கும் நடவடிக்கை குறித்து விளக்கி கூறப்பட்டது.  இது குறித்து வேளாண் உதவி இயக்குநர் சுப்பை யன் விவசாயிகளிடம் தெரிவிக்கையில், அமெரிக்கன் படைப்புழு, நெல், மக்காச்சோளம், காய்கறிகள் உள்ளிட்ட 80 வகையான பயிர்களை தாக்கும் வல்லமை படைத்தது. எனினும் மக்காச் சோளப்பயிரினை விரும்பித்தாக்கும் தன்மை கொண்டது.  இந்தப் புழுவின் தாய் அந்துப்பூச்சி ஒரே இரவில் 100 கிலோ மீட்டர் தூரம் வரை பறக்க கூடியதால் விரைவில் அதிக பரப்பளவில் பரவும், உடனடியாக இதனைக் கட்டுப் படுத்த வேண்டும். நிலத்தை ஆழமான உழவு செய்தல் மற்றும் மண்ணில் வேப்பம், புண்ணாக்கு இடுதல், விதை நேர்த்தி செய்தல், போதிய பயிர் இடைவெளி வேப்ப எண்ணெய் கரைசல் தெளித்து, இனக்கவர்ச்சி பொறி கள் வைத்தல், மக்காச்சோளம் விதைக்கும் போது ஊடு பயிர் பயிரிடுதல், பயிர் சுழற்சி, முறையாகப் பின்பற்று தல், உயிரியல் பூச்சிக்கொல்லி தெளித்தல் உள்ளிட்டவை முறையாகக் கடைபிடித்தால் மட்டுமே அமெரிக்கன் படைப்புழுக்களை முற்றிலும் கட்டுப்படுத்தி அழிக்கலாம் என்றார்.  வட்டார வேளாண் அலுவலர் விவேக், வேளாண் உதவி அலுவலர்கள் வேதையராஜன், கனகராஜ், பால சந்திரன், மகேஷ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்ட னர்.