திருச்சிராப்பள்ளி, மே 31- கொரோனா வைரஸ் பர வலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத னால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியக்குழு சார்பில் பனமங்கலம் பகுதியில் தொழி லாளர்கள் மற்றும் பொதுமக்க ளுக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், தொழி லாளர்கள் மற்றும் பொதுமக்க ளுக்கு நிவாரண தொகுப்பை வழங்கினார். இதில் குணா, செழி யன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.