தஞ்சையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், நவ.22- தஞ்சாவூர் மாநகராட்சிப் பகுதி யில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டி டம் கட்ட முனைப்பு காட்டும் அதி காரிகள், மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தயங்கு வது ஏன் என கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகராட்சி அலுவ லகம் முன்பாக வெள்ளிக்கிழமை அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்து க்கு மாநகரச் செயலாளர் ந.குருசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் கோ.நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.மாலதி, பி.செந்தில்குமார், ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், தஞ்சாவூர் மாநகராட்சிப் பகுதிகளில் சாலை யோரத்தில் வழிந்தோடும் புதை சாக்கடை அடைப்புகளை சீரமைக்க வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள மாநகராட்சி சாலைகளை சீரமைக்க வேண்டும். நகரின் பல இடங்களில் அகற்றப்படாமல் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். பயன்பாட்டில் இல்லாத கழிவறைகளை உடனடி யாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும். எரியாத தெரு மின் விளக்குகளை உடனடியாக பழுது நீக்கி ஒளிரச் செய்ய வேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக பழைய பேருந்து நிலையத்தை இடம் மாற்றம் செய்த இடத்தில் பயணிக ளின் வசதிக்காக அங்கு கழிவறை, குடிநீர், பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும். கீழவாசல் சரபோஜி சந்தையில் கடை வைத்துள் ளவர்களுக்கு மாற்று இடம் வழங்கிய பின்னரே, கடைகளை இடிக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டிடம் கட்ட முனைப்பு காட்டும் அதிகாரிகள், பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தயக்கம் காட்டுவது ஏன்” என வலியுறுத்தி கண்டன முழக் கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாவட்டக்கு குழு உறுப்பினர்கள் இரா.புண்ணிய மூர்த்தி, என்.சிவகுரு, செ.ராஜன், என். சரவணன், கோ.அரவிந்தசாமி, வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவர் கணேசன், கீழ வாசல் சரபோஜி மார்க்கெட் வியா பாரிகள் சங்கத் தலைவர் பி.பால் ராஜ், நகரக்குழு உறுப்பினர்கள் எஸ்.மனோகரன், சி.ராஜன், எம்.கோஸ்கனி, ஹெச்.அப்துல் நசீர், எம். வடிவேலன், சி.ராமு, எஸ்.சாந்தா, இ.வசந்தி மற்றும் வணிகர்கள், கட்சியினர், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.