tamilnadu

img

கலைமகள் பள்ளி சாதனை

தரங்கம்பாடி, ஏப்.29-நாகை மாவட்டம் செம்பனார்கோவில் கலைமகள் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளது. மரகதலெட்சுமி என்ற மாணவி 486 பெற்று பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். விஷ்ணுப்ரியன் என்ற மாணவர் 479 பெற்று இரண்டாமிடமும், மனிஷா என்ற மாணவி 476 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளார். சாதனைப் படைத்த மாணவர்களை கலைமகள் கல்வி நிறுவன தாளாளர் நெடுஞ்செழியன், நிர்வாக இயக்குநர் என்.எஸ்.குடியரசு மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.

;