tamilnadu

நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க அறிவுறுத்தல்

நாகப்பட்டினம், மே 14-நாகப்பட்டினம் மாவட்ட அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடின்றிக் கிடைத்திடவும், அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் போதிய ‘ஓ.ஆர்.எஸ்.பவுடர்’ மற்றும் திரவங்கள் போன்றவற்றை இருப்பில் வைத்திருக்க வேண்டும். காட்டுத் தீ நிகழாத வண்ணம் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடர்புகொண்டு பொதுமக்கள் புகார் தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.  


மதுக்கடைகளை மீண்டும் திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு 

புதுக்கோட்டை, மே 14- புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும்திறக்கக் கூடாது என வலியுறுத்திமாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரிக்கு அப்பகுதி பொதுமக்கள் அனுப்பியுள்ள மனுவில், கொத்தமங்கலம் ஊராட்சி மாவட்டத்தின் பெரிய ஊராட்சிகளில் ஒன்று. இங்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள்வசிக்கின்றனர்.இங்கு இருந்த இரண்டு டாஸ்மாக்கடைகளால் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு தொந்தரவுகள் ஏற்பட்டன. மக்களின் தொடர் போராட்டங்களால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஆனால் மூடப்பட்டாலும் பலஇடங்களில் மது விற்பனை நடந்து வருகிறது. சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போது மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கமாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. பொதுமக்களின் எதிர்ப்பை மீறி மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டால் மீண்டும் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.