tamilnadu

img

நூறு நாள் வேலையை முறைபடுத்தக் கோரி முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

முசிறி, ஜூலை 6- முசிறி ஊராட்சிய ஒன்றிய அலுவலகத்தை நூறு நாள் வேலை கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண் கூலித் தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.  திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா வெள்ளுர் ஊராட்சி பகுதியில்  நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் அண்மை காலமாக நூறு நாள் வேலை திட்ட பணிகள் சரிவர நடப்பதில்லை, தொழிலாளர்களுக்கு முறையாக வேலை வழங்கப்படுவதில்லை என இப்பகுதியை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் வெள்ளுர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மக்கள் கூறும்போது, நூறு நாள் வேலை திட்டம் எங்களது ஊராட்சியில் முறையாக செயல்படுத்துவது இல்லை. தொழிலாளர்களுக்கு 50 நாட்கள் கூட வேலை தருவது கிடையாது. இதனால் எங்களுக்கு பொருளாதார ரீதியாக குடும்பத்தை நடத்துவது மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நூறு நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவதோடு தற்போது தொழிலாளர்களுக்கு முறையாக தொடர்ந்து வேலை கொடுக்க ;வேண்டும். ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டினால் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். பின்னர் கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர். ஒன்றிய ஆணையர் கென்னடி, தொழிலாளர்களின் கோரிக்கை மனு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.