குடவாசல், ஜூலை 12- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பூந்தோட்டத்தில் புதன்கிழமை சிறுபான்மை மக்கள் நலக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாரி.செல்வராஜ் தலைமை வகித்தார். சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் எஸ்.ராமசாமி சிறப்புரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.எம்.சலாவுதீன், நாகை மாவட்ட சிஐடியு சங்கத்தின் செயலாளர் சீனி.மணி, சிபிஎம் நன்னிலம் ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.சுந்திரமுர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய செயலாளராக இப்ராஹிம், தலைவராக ஆர்.ரஹமத்துல்லா, பொருளாளராக எஸ்.ரஹமத்துல்லா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.