தஞ்சாவூர் ஆக.30- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சேதுபாவாசத்திரம் வட்டார வளமையம் சார்பில் புதன்கிழமை பத்துக்காடு- அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. முகாமினை வட்டார கல்வி அலுவலர்கள் சு.சகுந்தலா, ராமமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர். வட்டார வளமைய மேற்பர்வையாளர் டேவிட் சார்லஸ் வரவேற்றார். மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் ரவீந்திரன், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மாவட்டத் திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கினர். முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்ற 157 குழந்தைகளில் 43 குழந்தைகளுக்கு புதிய தேசிய அடையாள அட்டை, 17 குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. 6 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. சிறப்பாசிரியர்கள் அனுராதா, சுமதி, இயன்முறை மருத்துவர் விஜயராஜா, ஆசிரியர் பயிற்றுனர்கள் ஷாஜிதாபானு, சரவணன், சிவா, ஜனனி, ரமேசு, மகேஸ்வரன், நஸ்ரின்பேகம், ஜீவலெட்சுமி கலந்து கொண்டனர்.