tamilnadu

img

சீத்தாராம் யெச்சூரி கைதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஆக.9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, காஷ்மீர் ஸ்ரீநகர் சென்ற போது கைது செய்யப்பட்டதை கண்டித்து பெரம்பலூரில் கட்சியின் மாவட்டக்குழு சார்பில் புதிய பேருந்து நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.செல்லதுரை, பி.ரமேஷ், எஸ்.அகஸ்டின், எ.கலையரசி ஆகியோர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.  பி.கிருஷ்ணசாமி, எ.கணேசன், பி.முத்துசாமி, இராஜகுமாரன், ஆட்டோ ஊழியர் சங்கம் சி.சண்முகம், ரெங்கநாதன், தமுஎகச மாவட்டச் செயலாளர் ப.செல்வகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். காவல்துறை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கலந்து கொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். 

திருவாரூர்
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிவேல், ஆர்.குமாரராஜா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமசாமி, எம்பிகே.பாண்டியன், டி.முருகையன், கே.பி.ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன், நகர செயலாளர் எம்.பாலசுப்ரமணியன், சிபிஎம் மூத்த தலைவர் எம்.மாதவன், வாலிபர் சங்கத் தலைவர் ஜலாவுதீன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

திருக்கடையூர்

நாகை மாவட்டம்,திருக்கடையூரில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் வட்ட செயலாளர் பி.சீனி வாசன் தலைமை வகித்தார். மாநில க்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வீ.மாரி முத்து,மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ வுமான நாகை மாலி, ஆகியோர் கண்டன உரையாற்றினர்.மாணவர் சங்க மாநிலத்தலைவர் கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சிம்சன்,ராசையன்,ரவிச்சந்திரன் மற்றும் வட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டு கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.