tamilnadu

img

டேங்கர் லாரி கவிழ்ந்து ரோட்டில் வழிந்தோடிய பல ஆயிரம் லிட்டர் டீசல்

பெரம்பலூர், மே 9-சென்னையிலிருந்து டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று விருதுநகர் நோக்கி சென்றது. பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை நெடுஞ் சாலை சிறுவாச்சூர் என்ற இடத்தில் சென்ற போது கார் ஒன்று சாலையின் குறுக்கே கடக்க முயன்றது. அப்போது லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகா சரசம்பட்டியை சேர்ந்த டேங்கர் லாரி டிரைவர் அகிலன் மற்றும்கிளினர் அறிவழகன் ஆகியோர் படுகாயத்துடன் உயிர் தப்பினர். லாரியில்இருந்த 24 ஆயிரம் லிட்டர் டீசல் சாலையில் கொட்டிதால் போக்குவரத்து ஒருமணி நேரத்திக்குற்கும் மேல் பாதிக்கப்பட்து. விபத்து குறித்து பெரம்பலூர் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;