பொன்னமராவதி, மே 26-பொன்னமராவதி ஒன்றியம் சுந்தரசோழபுரம் மலையப்பெருமாள் அய்யனார் கோவில் விழாவை முன்னிட்டு விரட்டு மாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சிவகங்கை, மணப்பாறை, நத்தம் என பல்வேறு பகுதிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட காளைகள், 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, வீரர்கள் விரட்டி பிடித்து அடக்கி விளையாடினர். பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன், தீயணைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமையிலான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.