tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

கருங்குழி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு

படுக்கை வசதியுடன் புதிய கட்டடம்
சட்ட மன்றத்தில் புகழேந்தி வலியுறுத்தல்
 

சென்னை, ஜூலை 2-  தமிழகச் சட்டமன்ற கூட்டத்தொடரில் செவ்வாயன்று (ஜூலை 2) நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது,  மதுராந்த கம் தொகுதிக்குட்பட்ட கருங்குழி பேரூராட்சி ஜி.ஜி. பேட்டையில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 படுக்கை கள் வசதி கொண்ட புதிய  கட்டம் கட்டப்படுமா என மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.புகழேந்தி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘6 படுக்கை வசதிகளுடன் கூடிய, இந்த ஆரம்பச் சுகாதார நிலையத்தில்  மாதம் சராசரியாக 12 பிரசவங்கள் நடைபெற்றுவருகின்றது. மேலும் திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில்  இம்மருத்துவமனை அமைந்திருப்பதால் கூடுதலாக 10 படுக்கை வசதி கொண்ட கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதேபோன்று 50க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் பயன்பெறும் செய்யூர் தாலுகா மருத்துவமனையில் போதிய  அடிப்படை வசதிகளும், மருத்துவர்கள்  பற்றாக்குறையும் உள்ளது. இதை சரி செய்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என செய்யூர் தொகுதி உறுப்பினர் ஆர்.டி.அரசு எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர்  உடனடியாக செய்யூர் தாலுகா மருத்துவ மனை ஆய்வு செய்யப்பட்டு  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் வடு இல்லாமல் மார்பு அறுவை சிகிச்சை

சென்னை, ஜூலை 3- நாட்டிலேயே முதல் முறையாக மேற்குவங்க த்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கு வடு இல்லா மல் மார்பக அறுவை சிகிச்சை சென்னையில் செய்துமுடிக்கப்பட்டுள்ளது. 26வயதாகும் அந்த பெண்ணுக்கு கடந்த சில மாதங்களாக மார்பகத்தில் கடுமையான வலிஇருந்து ள்ளது. இதன் காரணமாக அவர் சென்னை கீழ்ப்பாக்க த்தில் உள்ள லிமா மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டார். அவருக்கு மார்பகத்தில் எந்த சேதமும் ஏற்படாமல் இருக்க அக்குள் வழியாக அக நோக்கி (எண்டோஸ்கோப்பி) மூலமாக மார்பகத்தில் இருந்த கட்டி அகற்றப்ப ட்டது. நல் வாய்ப்பதாக அந்த கட்டி புற்றுநோய் கட்டியாக இருக்கவில்லை. மேலும் மார்பகத்திலும் எந்த வடுவும் இல்லாமல் உள்பக்கமாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்ப ட்டு கட்டி அகற்றப்பட்ட இடத்தில் செயற்கை திசுக்கள் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு ஸ்டெல்த் அறுவை சிகிச்சை என்று பெயர். இதுபோன்ற அறுவை சிகிச்சை தொழில்நுட்பத்தை பல அறிந்திருக்கவில்லை.மேலும் ஏராளமான இளம் பெண்கள் கட்டி அல்லது தைராய்டு நீக்குவதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள தயங்கு கிறார்கள். மார்பக அல்லது கழுத்து அறுவை சிகிச்சை நடைமுறைகளால் ஏற்படும் வடுக்களால் தோற்றத்தை அல்லது சுயமதிப்பை பாதிக்கக்கூடும் என்று பெரும்பாலான பெண்கள் கருதுகிறார்கள். நவீன மருத்துவ தொழில்நுட்ப த்தில் இதற்கு தீர்வு உள்ளதால் வடுஇல்லாமல் அறுவை சிகிச்சை செய்து கொள்ளமுடியும் என்றார் லிமா மருத்துவமனை தலை வர் டாக்டர் ஜெ.எஸ்.ராஜ்குமார்.  மார்பகத்தில் இருந்து கட்டி, பரு, கழலை ஆகிய வற்றை வடு இல்லாமல் நீக்கக்கூடிய அக நோக்கி மார்பக அறுவை சிகிச்சை என்பது ஒருபுரட்சிகரமான மாற்று தொழில்நுட்பம் என்று லேப்ரோஸ்கோபிக் உடல்பருமன் அறுவை சிகிச்சை நிபுணர்  டாக்டர் அணிருத் ராஜ்குமார் கூறினார்.