பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
வெம்பக்கோட்டை, ஜன.6- சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத் தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள் ளது. மேலும் இருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாத்தூர் அருகே உள்ள மஞ்சள்ஓடை பட்டி கிராமத்தில் கருப்பசாமி என்பவ ருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள் ளது. அதில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் ஆலை உரிமையாளர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 தொழிலாளர்கள் மதுரை, நெல்லை, கோவில்பட்டி அரசு மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வந்தனர். இச்சம்ப வம் குறித்து ஏழாயிரம்பண்ணை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர். இந்நிலையில் 60 சதவீத தீக்காயம் மற்றும் தலைக்காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முனியசாமி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2 பேர் நெல்லை மற்றும் கோவில் பட்டி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
17 வயது பெண்ணின் கருவை கலைக்க உயர்நீதிமன்றம் அனுமதி
மதுரை, ஜன.6- சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 17 வயதான இளம்பெண் ஒருவ ரின் தாயார், இளம்பெண்ணின் கருக் கலைப்பிற்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை வியாழனன்று விசா ரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘17 வயது நிரம்பிய இளம்பெண், தங்கப் பாண்டி என்பவரால் கருவுற்று, தற்போது ஆறு 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது தொடர்பாக வாடிப்பட்டி காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனையின் முதல்வர் அந்த இளம் பெண் ணின் கருவை கலைக்க உரிய நட வடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்படு கிறது. வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் இந்த வழக்கின் விசாரணையை மூன்று மாதங்க ளில் முடிக்க வேண்டும் எனவும் உத்தர விட்டார்.
மீன் வியாபாரியிடம் லஞ்சம்: உணவு பாதுகாப்பு அலுவலர் கைது
தேனி, ஜன.6- தேனி நகராட்சி அலுவலகத்திற்குப் பின்புறம் மீன் கடை வைத்திருப்பவர் திரு மலைபால்பாண்டி. இவரது கடைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சண முகம் உள்ளிட்ட அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது கெட்டுப்போன மீன் விற்கப்படுவதாக கூறியுள்ளனர். அபரா தம் விதிக்காமல் இருக்க ரூ.15ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து திருமலை பால்பாண்டி தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். அவர் களின் ஆலோசனையின் பேரில் தேனி காமராஜர் பேருந்து முனையத்தில் உள்ள வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்திற்குச் சென்று சண்முகத்தி டம் ரசாயனம் தடவிய லஞ்சப் பணத்தை கொடுத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து காவல் துணைக் கண்காணிப்பாளர் கருப்பையா தலைமையில் ஆய்வாளர் ஜெயப்பிரியா உள்ளிட்ட போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.இதில் லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்து வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சண் முகத்தை போலீஸார் கைது செய்தனர்.முன்னதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராகவனிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
கொரோனா கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு
இராமநாதபுரம், ஜன.6- இராமநாதபுரம் மாவட்டத்தில், நோய்த்தொற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும் பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் நோயை கருத்தில் கொண்டும் பொதுமக்கள் நலன் கருதியும், பொதுமக்கள் மற்றும் தொற்று பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மையம் போர்க்கால அடிப்படையில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இம்மையத்தினை அலைபேசி எண் - 7708711334, 7708925833, 7708292732, தொலை பேசி எண் - 04567-230060, கட்டணமில்லா தொலைபேசி எண் - 1077, கட்டணமில்லா தொலைபேசி எண் - 104 ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொண்டு படுக்கை மற்றும் பிராண வாயுவுடன் கூடிய படுக்கை வசதியுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை விவ ரங்கள் மற்றும் நோயாளிகளின் உடல் நலக் குறைவிற்கேற்ப தக்க மருத்துவ அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களையும் வழங்கிட வழி வகை செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனை, ஆக்ஸிஜன் நிலையத்தை ஆய்வு செய்த தேனி மாவட்ட ஆட்சியர்
தேனி, ஜன.6- கொரோனா தொற்றின் மூன்றா வது அலையை எதிர்கொள்ள, பெரியகுளத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆக்ஸிஜன் மையத்தை தேனி ஆட்சியர் க.வீ.முரளீதரன் ஆய்வு செய்தார். வடுகப்பட்டி புற வழிச்சாலை யில் இருசக்கர வாகனங்கள், ஆட் டோக்கள், பேருந்துகள் மற்றும் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட தினசரி காய்கறி சந்தையில் செயல்பட்டு வரும் கடைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா நோய்த் தொற்று அர சின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற் கொண்டு, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடை பிடிப்பதின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். கொரோனா நோய்த்தொற்று 3-ஆம் அலையை தடுத்திடும் பொருட்டும், தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக் ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டு பொதுமக்களை பாது காத்திடும் வகையிலும், தமிழக அர சால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த் தடுப்பு நடவ டிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறு அறிவுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார். அதனைத்தொடர்ந்து, பெரிய குளம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நிலை யம், மருத்துவர்கள் மற்றும் அலு வலர்கள், பணியாளர்களின் வருகை பதிவேடு, படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்துள்ள பொதுமக்கள், சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு ஆகியன குறித்தும், 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் நிலையத்தின் செயல்பாடுகள் குறித் தும், ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கையில் பொங்கல் தொகுப்பு வழங்கல்: அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்
சிவகங்கை, ஜன.6- சிவகங்கை மாவட்டம் மானா மதுரையில் 4 லட்சத்து 20 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார். இதில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், மானா மதுரை ஊராட்சி ஒன்றிய பெருந்தலை வர் லதா அண்ணாதுரை, பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜாமணி, திமுக நகர செயலாளர் பொன்னுச்சாமி, திமுக ஒன்றிய செயலாளர் அண்ணா துரை, முன்னாள் எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி ஆகியோர் கலந்து கொண்ட னர். சிவகங்கையில் நடைபெற்ற விழா வில் சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மஞ்சுளா பாலசந்தர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலை வர் மணி முத்து, ஆதிதிராவிடர் நல விழிப்புணர்வு குழு உறுப்பினர் துறை ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்ட னர். திருப்பத்தூரில் நடைபெற்ற விழா வில் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சண்முகவடிவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந் தில், பேரூராட்சி முன்னாள் தலைவர் சாக்ளா, திமுக நகர செயலாளர் கார்த்தி கேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருப்புவனத்தில் நடைபெற்ற விழா வில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சின்னையா, திருப்புவ னம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் சேங்கைமாறன், ஒன்றி யக்குழு துணைத் தலைவர் மூர்த்தி, திருப்புவனம் பேரூராட்சி செயல் அலு வலர் ஜெயராஜ் திமுக ஒன்றிய செய லாளர் வசந்தி சேங்கை மாறன், நகர செயலாளர் நாகூர் கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கான குடும்ப அட்டை சிறப்பு முகாம்
இராமநாதபுரம், ஜன.6- இராமநாதபுரம் மாவட்டம் மூன்றாம் பாலி னத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்க சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் தெரிவித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகள் வழங்கு வதற்கு ஏதுவாக தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, ஜனவரி 8 அன்று காலை 10 மணி முதல் அந்தந்த வட்டங்க ளில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மின்னணு குடும்ப அட்டை பெறாத 18 வயது பூர்த்தி அடைந்த மூன்றாம் பாலி னத்தவர்கள் இணையம் மூலம் மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க புகைப்படம், ஆதார் அட்டை நலவாரிய உறுப்பினர் அட்டை மற்றும் ஏதேனும் ஒரு இருப்பிட ஆதாரம் (எரிவாயு ரசீது அல்லது வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம் இருந்தால் சமர்ப்பிக்கலாம்) இவற்றுடன் கைப்பேசி எண் வழங்கப்பட வேண்டும். மூன்றாம் பாலினத்த வர்களின் பெயர்கள் அவர்களது பெற்றோர், காப்பாளர் குடும்ப அட்டையில் இடம் பெற்றிருக் கும் பட்சத்தில் விண்ணப்பதாரரிடம் கோரிக்கை மனு பெற்று அதனடிப்படையில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களால் ஆன்லைனில் அவர்களது பெயர்களை நீக்கம் செய்ய நடவ டிக்கை எடுக்கப்படும். மூன்றாம் பாலினத்தவர்களின் பெயர்கள் வேறு வட்டம், மாவட்டங்களில் இருக்கும் பட்சத்தில் குடும்ப அட்டைகளில் இருந்து இவர் களது பெயர்களை ஆன்லைனில் நீக்கம் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி விரைவாக பெயர் நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக பெற் றோர், காப்பாளர் அனுமதி தேவையில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் தந்த பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் பிணையில் விடுவிப்பு
விருதுநகர், ஜன.6- வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருப்ப தற்கு உதவி செய்த பாஜக மாவட்ட நிர்வாகி உட்பட 4 பேர் காவல்நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர். வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கிடைக் காததால் ராஜேந்திர பாலாஜி தலைமறை வாகினார். இந்நிலையில், தனிப்படை காவல்துறையினர் அவரை கர்நாடக மாநி லத்தில் கைது செய்தனர். இந்நிலையில், அவருக்கு அடைக்கலம் கொடுத்த கிருஷ்ணகிரி பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், அவ ரது உறவினர் நாகேசன், விருதுநகர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப கழக மாவட்ட செயலாளர் பாண்டியராஜன், ரவி கணேஷ் ஆகிய 4 பேரையும் காவல்துறை யினர் கைது செய்து, அவர்களிடம் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் மீது சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், நால்வரையும் காவல் நிலைய பிணையில் காவல்துறையினர் விடுவித்தனர்.
மறைந்த எழுத்தாளர் டி.செல்வராஜ் எழுதிய அடுக்கம் நாவல் வெளியீட்டு விழா
திண்டுக்கல், ஜன.6- சாகித்ய அகாடமி விருது பெற்ற தோல் நாவலாசிரியர் மறைந்த தோழர் டி.செல்வ ராஜ் எழுதிய அடுக்கம் நாவல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. தோழர் டி.செல்வராஜ் தனது 81வயதில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் கால மானார். நோன்பு, கிணறு, தொண்டன், தாழம்பு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், மலரும் சருகும், தேனீர், மூலதனம், தோல் உள்ளிட்ட 6 நாவல்கள், 50 ஓரங்க நாடகங்கள், எழுதியுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் ஸ்தாபக தலை வர்களுள் ஒருவரான தோழர் டி.செல்வ ராஜ் தமிழ் சமூகத்தில் முற்போக்கு இலக் கியத்தின் முதல்பெரும் எழுத்தாளராக பரிணமித்தார். தான் இறப்பதற்கு முன்பாக அடுக்கம் நாவலை எழுதி கொடுத்துவிட்டு நம்மைவிட்டு மறைந்தார். அவர் உயிரு டன் இல்லாதபொழுது இந்த நாவல் வெளி யிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 8ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த நாவல் வெளியீட்டு விழா விற்கு நியு செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மதுரை மண்டல மேலாளர் அ.கிருஷ்ண மூர்த்தி வரவேற்கிறார். மேலாண் இயக்குநர் சண்முகம் சரவணன், முன்னிலை வகிக் கிறார். தமுஎகச மதிப்புறு தலைவர் ச. தமிழ்செல்வன் விழாவிற்கு தலைமை ஏற்று நாவலை வெளியிடுகிறார். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, மருத்து வர் இராஜேஷ்வரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், தமுஎகச திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் கவி ஞர் சசி ஆகியோர் முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார்கள். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநிலச்செயலாளரும், காந்திகிராம கிரா மிய நகர்நிலை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் பா.ஆனந்த குமார் நாவலை அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார். மூத்த வழக்கறிஞர் லஜபதிராய், தமுஎகச மாநிலச்செயலாளரும் எழுத்தா ளருமான ஆதவன் தீட்சண்யா, முனைவர் முகேசபாண்டியன், தமுஎகச மாநில தலை வர் (பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வுரை நிகழ்த்துகின்றனர். வழக்கறிஞர் செ.சார் வாகன் நன்றி கூறுகிறார்.
கொரோனா ஊரடங்கு விதிகள் தென்மாவட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் பெரும் திரள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
மதுரை, ஜன.6- கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழக அரசு ஊரடங்கு அறிவித்துள்ளதை தொடர்ந்து தென்மாவட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் பெரும் திரள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் ஆகியோர் கூறியுள்ளதாவது: மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் மற்றும் நெய்பர் மருத்துவ ஆராய்ச்சி மையம் போன்ற தென் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகளை ஒன்றிய அரசு துவங்கிட வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் வெள்ளியன்று நடக்க இருந்த பெரும் திரள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. ஆர்ப்பாட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.