tamilnadu

img

ஏப்ரல் 18, 19 தேதிகளில் உள்ளூர் விடுமுறை – திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் ஏப்.18, 19 தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா ஏப்.18ஆம் தேதியும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா ஏப்.19ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. இதையொட்டி, திருச்சி மாவட்டத்திற்கு ஏப்.18, 19 ஆகிய 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை, மாவட்டத்தில் உள்ள தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தும். அதேவேளையில், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் பொருந்தாது.

இந்த விடுமுறை நாட்களில், மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். இந்த விடுமுறைகளை ஈடுசெய்யும் வகையில் ஏப்.29, மே 13 வேலை நாட்களாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.