tamilnadu

img

உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.20- மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குனர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு 7வது ஊதியக்குழு அரசா ணை பரிந்துரைப்படி ஊதி யம் வழங்க வேண்டும். 1.10.17 முதல் நிலுவைத்தொகை வழங்க வேண்டும், சம வேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்க திருச்சி புறநகர் மாவட்டக் குழு சார்பில் செவ்வாய் அன்று தா.பேட்டை ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு உள் ளாட்சி துறை ஊழியர்கள் சங்க தலைவர் செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பழனிவேல், மாவட்ட செயலாளர் பன் னீர்செல்வம். சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் முருகேசன், மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்ட பொருளாளர் சுப்பிரமணி யன், கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

;