திருச்சிராப்பள்ளி, மே 10- தொழிலாளர் நல சட்டங்களை திருத்துவதை கைவிட வேண்டும். தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவதை கைவிட வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை உடனே வழங்க வேண்டும உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாநகர் மாவட்டக்குழு சார்பில் ஞாயிறு அன்று ஸ்ரீரங்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் வேளாங்கண்ணி, சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் வீரமுத்து, ஆட்டோ சங்க மாவட்ட நிர்வாகி வெற்றிச்செல்வன் ஆகியோர் பேசினர்.
சிஐடியு நிர்வாகிகள் ரெங்கசாமி, சுரேஷ், வெங்கடேசன், வள்ளியப்பன், நந்தகுமார் கலந்து கொண்டனர். சிஐடியு புறநகர் மாவட்டக்குழு சார்பில் துவாக்குடிமலை கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். சிஐடியு நிர்வாகிகள் பெல் பெருமாள், ரமேஷ், எல்ஐசி ராஜேந்திரன் கலந்து கொண்டனர். இதே போன்று திருச்சி மாவட்டத்தில் சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் ராமர், பொருளாளர் ராஜேந்திரன், சிஐடியு புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ், புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் சம்பத் உள்பட சிஐடியுவினர் அவரவர் வீட்டின் முன் தனிநபர் இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.