tamilnadu

img

காரைக்குடி- திருவாரூர் ரயில் சேவையை துவக்க கோரிக்கை

தஞ்சாவூர், மே 28-தமிழ்நாடு அரசு அனைத்து துறைஓய்வூதியர் சங்க வட்டக் கிளை மூன்றாம் ஆண்டு மாநாடு பட்டுக்கோட்டை விஜயாலயம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. சங்கக் கொடியை வட்டக் கிளைத் தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வன் ஏற்றி வைத்தார். வட்டத் தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வன் மாநாட்டிற்கு தலைமை வகித்தார். த.வேதையன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் சிவ. ரவிச்சந்திரன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். வட்டச் செயலாளர் சு.க.பாலகிருஷ்ணன் வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் ஆர்.புருஷோத்தமன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். மாநாட்டில் காரைக்குடி- திருவாரூர் அகல ரயில்சேவையை விரைவில் துவக்க வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாராட்டு

75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு கைத்தறி துண்டு அணிவித்து பேராசிரியர் மரு.சி.கணேசன் பாராட்டுரை வழங்கினார். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகி சிறை சென்ற கிராமஉதவியாளர்கள் கே.பாலு, டி.ஜெயக்குமார், பி.முகுந்தன், சி.ஜார்ஜ், சத்தியராஜ், வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை மாவட்ட துணைத் தலைவர்ஏ.விஸ்வநாதன், இணைச் செயலாளர் ஆர்.அண்ணாதுரை ஆகியோர் பாராட்டிப் பேசினர். தோழமை தொழிற்சங்க நிர்வாகிகள் சி.திருஞானம், எஸ்.பாலகிருஷ்ணன், பி.அறிவழகன், ஏ.செல்வராஜ், முருக.சரவணன், கி.பிச்சைமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர். புதிய தலைவராக ஆர்.அண்ணாதுரை, செயலாளராக கண.கல்யாணம், துணைத் தலைவர்களாக ஆர்.தமிழ்ச்செல்வன், தி.தமிழரசன், இணைச் செயலாளர்களாக க.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஆறுமுகம் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். மாவட்ட துணைத்தலைவர் ஆர்.தமிழ்மணி நிறைவுரையாற்றினார். நிறைவாக க.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.